வண்டி வண்டியா சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் வருது, எங்களுக்கு எதுவும் கிடைக்கலையே!
சென்னை: சென்னைக்கு வண்டி, வண்டியாக நிவாரணப் பொருட்கள் வந்தும் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று பலர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லாரி, லாரியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே திரையுலக பிரபலங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து நிற்கும் எங்களுக்கு அரசு எதையும் அளிக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில்
வெளியூர்களில் இருந்து வண்டி, வண்டியாய் நிவாரணப் பொருட்கள் வருகிறது என்கிறார்கள். ஆனால் அது யாருக்கு அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. மேலும் அவற்றை யார் பொறுப்பெடுத்து வினியோகம் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
மக்களை சந்திப்பதை தவிர்த்து தலைமறைவாக உள்ள அரசு பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
One more good news #ChennaiRainsHelp #ChennaiMicro pic.twitter.com/Dji085BrjP
— ரௌத்திரம் பழகு (@vanithaj) December 6, 2015