அதிமுக எம்எல்ஏக்கள் எங்கே.. பாமக வழக்கில் ஐகோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல்!
எம்எல்ஏக்களை விடுவிக்கக் கோரி பாமக வழக்கறிஞர் பாலுவால் தொடரப்பட்ட வழக்கில் எம்எல்ஏக்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை விசாரணை நடத்திய பின் அறிக்கை ஒன்றை போலீசார் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்து முடிந்த கையோடு, சிறை வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா என்பதை விசாரணை நடத்திய பின்னர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் சட்ட விரோதமாக ஈ.சி.ஆர் சாலையில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து, 130 அதிமுக எம்எல்ஏக்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் முன்பு பாமக வழக்கறிஞர் பாலு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இது தவிர, கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் சசிசலாவால் அடைக்கப்பட்ட பின்னர், குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரனை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதாவை ஆஜர்படுத்தவும் என்றும் 2 ஆட்கொணர்வு மனுக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
பாமக தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் காஞ்சிபுரம் எஸ்பி. கூவத்தூர் சென்று, சுதந்திரமாக எம்எல்ஏக்கள் இருக்கிறார்களா என்று விசாரணையை மேற்கொண்டார். பின்னர், பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு, கூவத்தூர் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள பகுதியில் 1000 ரவுடிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற விடுதியில் எம்எல்ஏக்கள் இருப்பதாக முதலில் அரசு தரப்பு தெரிவித்திருந்தது. பின்னர் எம்எல்ஏ விடுதியில் இல்லை என்று அரசு தரப்பு மறுக்கிறது. எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக கூறினாலும் அவர்கள் ஏன் இன்னும் வெளியே வரவில்லை. இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர் புகார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications