விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரம்: சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ
நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரை வாழ்த்தியும் நாளைய முதல்வர் என போற்றியும் அவரது ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில் மதுரை ஞானஒளிப்புரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் விஜய்க்கு நாளைய முதல்வர் என பேனர் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலாவது, விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரபடுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜயின் அரசியல் வருகையை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
எய்ம்ஸ் அமையும் இடத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயால் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.












Click it and Unblock the Notifications