ஹைகோர்ட்டில் குவிந்த உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர்கள்.. யார், யாருக்கு வாதிடுகிறார்கள் தெரியுமா?
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எந்த தரப்புக்கு யார் வாதாடுகிறார்கள்.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எடப்பாடி தரப்பு, 18 எம்எல்ஏக்கள் தரப்பு, சபாநாயகர் தரப்பு, ஆளுநர் தரப்பு என வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடி வருகின்றனர்.
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று தினகரன் தரப்பினர் ஆளுநரிடம் கடிதம் அளித்து முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து கொறடாவின் உத்தரவை மீறி 18 பேரும் செயல்பட்டதாக சபாநாயகர் அவர்களை நேற்று முன்தினம் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து அந்த 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் எடப்பாடி தரப்பு சார்பில் வைத்தியநாதன் சோமயாஜி வாதிடுகிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி திமுகவினர் தொடர்ந்த வழக்கில் ஆளுநர் தரப்பில் ராகேஷ் திரிவேதியும் ஆஜராகியுள்ளார்.
அதேபோல் சபாநாயகர் தரப்பில் அரிமாசுந்தரமும், 18 பேர் சார்பில் சல்மான் குர்ஷித் மற்றும் துஷ்யந்த் தவே ஆகியோரும் ஆஜராகியுள்ளனர். தற்போது தவே தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.