கனிமொழியின் ஸ்கெட்ச்.. தென்காசியில் கிருஷ்ணசாமி - ஜான் பாண்டியனை வீழ்த்திய ராணி ஸ்ரீகுமாரின் ‛பயோ’
தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி, பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன் ஆகிய இருபெரும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர்களை வீழ்த்தி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வென்றார். இந்நிலையில் தான் ராணி ஸ்ரீகுமார் யார்? அவரது பின்னணி என்ன? அவருக்கும் கனிமொழிக்கும் இடையேயான பந்தம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 40க்கு 40 வெல்வோம் என்ற முழக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார். தற்போது தேர்தல் முடிவில் 40க்கு 40 என அனைத்து தொகுதிகளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வசம் சென்றுள்ளது.

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மீண்டும் தோற்றுப்போய் உள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கும் ஒரு இடங்கள் கூட கிடைக்கவில்லை. இந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பல நட்சத்திர தொகுதிகள் இருந்தன. குறிப்பாக பல பிரபலங்கள் களமிறங்கி இருந்தனர்.
அந்த வகையில் தமிழகத்தில் அனைவராலும் கவனிக்கப்பட்ட ஒரு தொகுதி தான் தென்காசி. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அதேபோல் பாஜக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் களமிறங்கினார். இவர்கள் 2 பேரும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் பெரும் தலைவர்கள். அதோடு அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்கள்.
இதனால் தென்காசி தொகுதி அதிக கவனம் பெற்றது. இதற்கிடையே திமுக சார்பில் தென்காசி வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் களமிறக்கப்பட்டார். நாம் தமிழர் சார்பில் இசைமதிவாணன் போட்டியிட்டார். நான்கு முனை போட்டி தொகுதியில் நிலவியது. இதில் தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 1,96,199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மொத்தமாக 4,25, 679 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 2,29,480 வாக்குகள் மட்டுமே பெற்று ராணி ஸ்ரீகுமாரிடம் தோற்றார். இது தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி சந்திக்கும் 7 வது தோல்வியாகும்.
மேலும் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 2,08,825 ஓட்டுகளை பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் வேட்பாளரான இசை மதிவாணன் 1,30,335 ஓட்டுகள் பெற்று 4ம் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் தான் தென்காசி எம்பியாக தேர்வாகி உள்ள ராணி ஸ்ரீகுமாரின் பின்னணி பற்றிய விபரம் வருமாறு: எம்பியாக தேர்வாகி உள்ள ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் சிவக்குமார். இவர் எழுத்தராக இருந்து ஓய்வு பெற்றவர். தாய் பெயர் செல்வமணி. இவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராணி ஸ்ரீகுமார் அடிப்படையில் டாக்டர். மயக்கவியல் நிபுணரான இவர் அரசு மருத்துவராக பணியாற்றினார்.
இவரது கணவர் பெயர் ஸ்ரீகுமார். இவர் அரசு ஒப்பந்ததாரர். அதோடு திமுகவில் விவசாய அணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.
ராணி ஸ்ரீகுமார் 2002 முதல் திமுகவில் செயல்பட்டு வருகிறார். தென்காசி சிட்டிங் எம்பி தனுஷ் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் திடீரென்று தான் ராணி ஸ்ரீகுமாரின் பெயரை திமுக டிக் செய்தது.
இதன் பின்னணியில் கனிமொழி எம்பி உள்ளார். அதாவது தென்காசி தொகுதியில் பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் கனிமொழி உறுதியாக இருந்துள்ளார். இதில் முன்னாள் எம்எல்ஏ முத்து செல்வியின் பெயர் முன்னிலை வகித்தது. ஆனால் அவர் அதிமுகவில் இருந்து திமுகவில் வந்தவர் என்பதால் அவர் நிராகரிக்கப்பட்டார்.
அதன்பிறகு தான் ராணி ஸ்ரீகுமார் பெயர் ஓகே செய்யப்பட்டுள்ளது. அடிப்படையில் டாக்டர், பாரம்பரிய திமுக குடும்பம் (ராணி ஸ்ரீகுமாரின் பெரியப்பா துரைாஜ் சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து 2 முறை எம்எல்ஏவானவர். அதில் 1967ல் திமுக எம்எல்ஏவாக இருந்தார்), எம்பி தேர்தலை எதிர்கொள்வதற்கான பணபலம், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் பெரும் தலைவர்களாக அறியப்படும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோரை எதிர்க்கும் திறன் இருப்பதாக நினைத்து கனிமொழி தான் ராணி ஸ்ரீகுமாரின் பெயரை கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்து வாய்ப்பு வழங்கிய நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்றுள்ளார்.
-
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம்












Click it and Unblock the Notifications