ஜெ., சமாதியில் மாறி மாறி நடிக்கிறாங்க... அரசியலில் நடிக்க விரும்பவில்லை - நடிகை ஆர்த்தி
அரசியலில் நடிக்க விருப்பமில்லை என்று அதிமுகவில் இருந்து விலகிய நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.
சென்னை: சினிமா, சீரியலில் நடிப்பதைப் போல அரசியலில் தனக்கு நடிக்கத் தெரியாது என்றும் தான் நடிக்க விரும்பவில்லை என்றும் நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.
அதிமுகவில் என்ன நடக்கிறது என்று தெரியாத குழப்பத்தினாலே அந்த கட்சியில் இருந்து விலகியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.
நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் இரு அணிகளுக்கும் மாறி மாறி சென்று வருகின்றனர். இந்த நிலையில் பிரச்சார களத்தில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகை ஆர்த்தி அதிமுகவை விட்டு விலகி விட்டதாக நேற்று அறிக்கை வெளியிட்டார்.

நடிக்கத் தெரியாது
தனது முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்த்தி, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று, ஒவ்வொருவரும் அரசியல் நாடகம் போடுகிறார்கள். எனவே, கட்சியில் இருந்து விலகுகிறேன். எனது, ராஜினாமா கடிதத்தை தலைமை அலுவலகத்தில் யாரை சந்தித்துக் கொடுப்பது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

குழப்பமாக உள்ளது
உலகமே, இவர்களின் கூத்தை பார்த்து சிரிக்கிறது. நான் சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். மக்கள் முன் நடிக்க விரும்பவில்லை. அரசியலில் நடிக்கத் தெரியாததால் கட்சியில், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

எந்த அணியிலும் இல்லை
என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஒரு அணிக்கு அனுப்பினால் வேறு அணியில் இருப்பவர்கள் தன்னை அந்த அணியைச் சேர்ந்தவர் என்று நினைப்பார்கள். நான் எந்த அணியிலும் இல்லை. ஜெயலலிதா இல்லாத அதிமுகவில் நீடிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ள அவர், இனி எந்த கட்சியிலும் சேரமாட்டேன். மக்களுக்கு நல்லது செய்ய, கட்சி பொறுப்பு அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம் பறிபோனதை அரசியல் ரீதியான தோல்வியாகக் கருதி, அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் நடிகை ஆர்த்தி அதிமுகவில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications