சிஸ்டம் சரியில்லை... சிக்னல் பிரச்சனைக்கு ஏர்டெல், வோடாபோன் கொடுத்த விளக்கம்!
நேற்றிலிருந்து நிலவி வரும் சிக்னல் பிரச்சனைக்கு ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.
Recommended Video

சென்னை: நேற்றிலிருந்து நிலவி வரும் சிக்னல் பிரச்சனைக்கு ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.
விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் வோடாபோனில் நேற்று இணையம் மட்டுமே எடுக்காமல் இருந்தது.
ஆனால் இன்று காலையில் இருந்து பலருக்கும் போன் பேசுவது கூட தடைபட்டு இருக்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மீண்டும்
இன்று இந்த பிரச்சனை சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலையும் சிக்னல் பிரச்சனை தொடர்ந்தது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் ஆறுக்கும் அதிகமான பெரிய நகரங்களில் சிக்னல் வேலை செய்யவில்லை. வோடபோன் மொத்தமாக பலருக்கு எடுக்காமல் போனது.

ஏர்டெல் விளக்கம்
இதற்கு விளக்கம் தெரிவித்து ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நேற்று இரவு குறுந்தகவல் அனுப்பி இருக்கிறது. அதில் ஏர்டெல் நிறுவனத்தின் கணினி சர்வர்களை அப்டேட் செய்த காரணத்தால் இந்த் பிரச்சனை ஏற்பட்டதாக கூறியுள்ளது. ஆனால் இன்றும் பிரச்சனை தொடர்கிறது.

வோடபோன் விளக்கம்
அதேபோல் வோடாபோன் நிறுவனமும் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் அளித்த விளக்கத்தில் ''இது தற்காலிக பிரச்சனை மட்டுமே. நாங்கள் இதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். விரைவில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்'' என்றுள்ளனர்.

ஜியோ
வோடபோன், ஏர்டெல் வேலை செய்யாமல் போனதற்கு ஜியோதான் காரணம் என்று பலரும் கூறியுள்ளனர். ஏர்செல் போலவே பிரச்சனை வரப்போகிறது என்றுள்ளனர். ஆனால் சர்வர்களை மாற்றியது, வட்டார சிக்னல் சர்வர்களை மாற்றுவது உள்ளிட்ட காரணங்களால் இப்போது சிக்னல் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications