Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்செட் ஆன அழகிரி.!... பொதுக்குழுவில் ஆப்சென்ட்!!

Subscribe to Oneindia Tamil

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அழகிரி பங்கேற்கவில்லை. இதை ஊடகங்களும் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை.

காரணம் காங்கிரஸோடு தேர்தல் கூட்டணி' இல்லை என்ற செய்தி பிரதானமாகிப் போனதால், அழகிரி தி.மு.க. பொதுக் குழுவைப் புறக்கணித்த விவகாரம் பெரிதுபடுத்தப்படவில்லை.

எனினும் அழகிரியின் பொதுக்குழு புறக்கணிப்பு குறித்து கட்சிக்குள் பலதரப்பட்ட கருத்துகள் அலசப்படுகின்றன.

அஞ்சா நெஞ்சன்

அஞ்சா நெஞ்சன்

அஞ்சா நெஞ்சன்.... எதிர்கால எஜமானன் என்றெல்லாம் போஸ்டர் அடித்து மதுரை கலக்குவார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். அடுத்தமாதம் வரவிருக்கும் பிறந்தநாளுக்கு இப்போதிருந்த போஸ்டர் ஒட்ட இடம் பிடித்து காத்திருக்கும் அழகிரி ஆதரவாளர்களை கலங்கடிப்பது அவரது அப்செட்தானாம்.

அமைதியான அழகிரி

அமைதியான அழகிரி

கிரானைட் வழக்கில் மகன் துரை தயாநிதி மீது வழக்கு, தனது சகலமுமாய் இருந்த 'பொட்டு'சுரேஷ் கொலை - அடுத்தடுத்து நடந்துவிட்ட இவ்விரண்டு சம்பவங்களுக்குப் பிறகு அழகிரி ரொம்பவே அமைதியாகி விட்டாராம்.

பயம் காரணமா?

பயம் காரணமா?

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே அழகிரி கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை. ஆளும் தரப்பில் சூழ்ச்சி செய்து தனக்கும் தனது மகனுக்கும் ஏதாவது நெருக்கடிகளை உண்டாக்கிவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு. கேட்டவர்களுக்கு, 'அண்ணனுக்கு கால் வலி.. கண் வலி' எனக் காரணம் சொல்லி சமாளிக்கின்றனர் அழகிரியின் ஆதரவாளர்கள்.

ஒட்டு மொத்த புறக்கணிப்பு

ஒட்டு மொத்த புறக்கணிப்பு

இந்நிலையில்தான் திமுக பொதுக்குழு வுக்கு போவதா வேண்டாமா என்று விசுவாசிகள் கேட்டபோது, ‘பொதுக்குழுவுக்குப் போய்தான் என்ன ஆகப் போகிறது? நான் போகவில்லை; நீங்கள் மனசாட்சிப் படி நடந்து கொள்ளுங்கள்'என்று மையமாக சொல்லிவிட்டு அமைதியாகி விட்டாராம் அழகிரி. அண்ணனே போகாதபோது நமக்கு என்ன வேலை என்று ஒதுங்கிவிட்டனர் அழகிரியின் ஆதரவாளர்கள்.

கூச்சல் குழப்பம்

கூச்சல் குழப்பம்

அழகிரியின் ஆதரவாளரான தலைமைச் செயற்குழு உறுப்பினர் முனியாண்டி, ‘தென் மாவட்ட தி.மு.க.வில் அழகிரியை கேட்காமல் தலைமை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று பொதுக்குழுவில் பேசியதற்கு கூச்சல் போட்டு அவரை உட்கார வைத்துவிட்டனராம்.

கட்சி ஒற்றுமை

கட்சி ஒற்றுமை

அப்போது அழகிரி இருந்திருந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றிருக்கும். இப்படித்தான் 2011ம் ஆண்டு பொதுக்குழுவின் போது காலையில் போயிருந்த அழகிரி மாலையில் ஆப்சென்ட் ஆனார் காரணம் கூட்டத்தில் பேசிய அனைவரும் ஸ்டாலினை தலைவராக்கவேண்டும் என்று பேசியதான் என்று கூறப்பட்டது. அதேபோல இந்த ஆண்டு நடந்து விடக்கூடாது என்றுதான் கூட்டத்தை புறக்கணித்தாராம் அழகிரி.

அழகிரி அப்செட்

அழகிரி அப்செட்

காங்கிரஸோடு கூட்டணி இல்லை என்ற முடிவை அழகிரி அவ்வளவாக ரசிக்கவில்லை என்கிறார்கள்.

எத்தனை போராட்டம்

எத்தனை போராட்டம்

"பொதுக்குழுவில் தனது கருத்தை தைரியமாக எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு அழகிரி எதற்காக புறக்கணிக்க வேண்டும்? என்று கேட்கின்றனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள். தனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்பவர், கட்சியை வலுப்படுத்த தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக எத்தனை போராட்டங்களை நடத்தினார். எத்தனை கூட்டங்களில் முழங்கினார்?'' என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

போஸ்டரில் பதில்

போஸ்டரில் பதில்

மொத்தத்தில் அழகிரியின் அப்செட்தான் பொதுக்குழுவிற்கு ஆப்சென்ட் ஆகக் காரணம் என்று கூறுகின்றனர். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து அடுத்த மாதம் பிறந்தநாள் விழா போஸ்டர்களில் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+