கருப்பு பூனை படை பாதுகாப்பை வாபஸ்பெற்று, நிராயுதபாணியாக ஜெ. கொல்லப்பட்டார்: பி.எச்.பாண்டியன் பகீர்
'அம்மா' ஆஸ்பத்திரிக்கு போகும்போது கருப்பு பூனை போகவில்லை. 75 நாட்களும் அப்பல்லோவில் கருப்பு பூனை படை பாதுகாப்பை நான் பார்க்கவில்லை என பி.எச்.பாண்டியன் தெரிவித்தார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் அதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், முன்னாள் சபாநாயகரான பி.எச். பாண்டியன் பங்கேற்றார்.
அப்போது, பி.எச். பாண்டியன் பேசுகையில் கூறியதாவது: எல்லோரும் அம்மா அவர்களால் பயன்பெற்றவர்கள், அன்பை பெற்றவர்கள். நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்த அம்மாவின் பாதுகாப்பை இல்லாமல் ஆக்கிவிட்டு, அவரது ஆயுளை முடித்துவிட்டார்களே என்று நினைக்கும்போது எனக்கு வேகம் வருகிறது.

கருப்பு பூனை படை பாதுகாப்பை யாருமே வாபஸ் பெற முடியாது. ஆனால், 'அம்மா' ஆஸ்பத்திரிக்கு போகும்போது கருப்பு பூனை போகவில்லை. 75 நாட்களும் அப்பல்லோவில் கருப்பு பூனை படை பாதுகாப்பை நான் பார்க்கவில்லை. நிராயுதபாணியாக 'அம்மாவை' ஆக்கிவிட்டு அவரது உயிரை இந்த சதிகார கும்பல் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
அயோக்கிய மனிதர்கள், நேர்மையற்ற டாக்டர்களை வைத்துக்கொண்டு போலி ஆவணங்களை உருவாக்க முடியும். சொத்துக்களையும், பதவிகளையும் பறிக்க நினைப்போர் டாக்டர்களை பயன்படுத்தி நோயாளியின் உயிரை பறிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் சுட்டிக் காட்டியுள்ளது.
எல்லா டாக்டர்களும் நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் பணத்தாசை உண்டு, அபிலாஷைகள் உண்டு. ஜெயலலிதா மறைந்த 7வது நாளிலேயே பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று முயற்சி செய்து அதை வெற்றி பெற்றார்களே.
முதல்வர் அமைச்சர்களில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம். ஆனால் அமைச்சர்களை வைத்து முதல்வரை நீக்குமாறு பேட்டி கொடுக்க செய்தவர், கைதி எண் 3525 (சசிகலா). கொள்ளையடித்துவிட்டார்கள், பணம் சேர்த்துவிட்டார்கள். பிறகு என்ன, கொலைதான் அடுத்ததாக முடியும். இதை நான் எதிர்பார்த்ததுதான்.
அந்த குடும்பத்தாரின் செல்போன் உரையாடல்களை உளவுத்துறை வெளியே கொண்டுவர வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும்.
தேசிய பாதுகாப்பு படை சட்டப்படி (1986), பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவிட்டாலோ, ஆயுதத்தை கீழே போட்டுவிட்டாலோ, அவர்களுக்கு மரண தண்டனைதான் உண்டு. கருப்பு பூனைகளுக்கு தூக்கு தண்டனை உறுதி. இவ்வாறு பி.எச்.பாண்டியன் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications