அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை ஏன்?... மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் தம்பிதுரை
Recommended Video

திருச்சி: அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதே அழகிரியின் பேரணி குறித்த செய்திகள் வெளியே வரக் கூடாது என்பதற்காகத்தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கடந்த 5-ஆம் தேதி அழகிரி தனது பலத்தை நிரூபிக்க சென்னை மெரினாவில் அமைதி பேரணி நடத்தினார். இந்த பேரணிக்கு முன்னதாக திமுகவினர் யாரேனும் அழகிரியின் பேரணிக்கு சென்று விடுவரோ என்ற பதற்றம் அண்ணா அறிவாலயத்தில் இருந்தது.
இந்த நிலையில் அன்றைய தினம் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் உயரதிகாரிகள் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.

அதிமுக பதற்றம்
இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரும், டிஜிபி ராஜேந்திரனும் உடனடியாக பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அதிமுகவும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது.

முடக்க சதி
இது குறித்து திருச்சி வந்த தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாட்டை முடக்க சதி நடைபெறுகிறது.

சதி வலை
இதனால் அவர் மீது வேண்டுமென்றே புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் திமுகவிற்கும் பாரதிய ஜனதா விற்கும் ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து கொண்டிருக்கிறது. உண்மையான கூட்டணியே அவர்களுக்கு இடையேதான், எங்களுக்கு இடையே இல்ல.

இதுவே எடுத்துக்காட்டு
அழகிரியின் பேரணி குறித்த செய்திகள் வெளியே வரக் கூடாது என்பதற்காக ஸ்டாலினுக்கு உதவவே மத்திய அரசு சிபிஐ அதிகாரிகளை அனுப்பி அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தியது. எனவே திமுக- பாஜக கூட்டணி இந்த ஒரு சம்பவமே போதும் என்றார் அவர்
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications