"வறண்ட" பாலைவனமான சென்னை.. வருடாந்திர அக்னி வெயில் அளவை காட்டிலும் அதிகரிக்கும் வெப்பநிலை.. ஏன்?
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயிலை விட சென்னையில் கடந்த சில நாட்களாக அதிக வெயில் சுட்டெரிப்பதற்கு காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கோடை காலம் வந்தாலே வெப்பம் தாள முடியாது. அதிலும் கோடையில் கத்தரி வெயில் காலத்தில் கேட்கவே வேண்டாம். ஆனால் இந்த முறை கத்தரி வெயில் கடந்த மே 4 ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 28 ஆம் தேதி முடிவடைகிறது.

இதன்பிறகு வெயில் ஒன்று முதல் இரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையும் என கூறப்படுகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் உஷ்ணம் தாங்க முடியவில்லை. நாள்கணக்கில் ஏசி ஓடியது ஓடியபடியே இருக்கிறது.
ஒரு பக்கம் கரென்ட்பில்லை நினைத்து வருந்தினாலும் பாலைவனத்தை விட மோசமான சூழலை கொடுக்கும் இந்த வெயிலை நினைத்தால் சற்று அச்சமாக இருக்கிறது. தோல் வியாதிகள், கொப்புளங்கள், வியர்க்குரு உள்ளிட்டவை ஏற்பட்டுவிட்டால் அதனால் அவதிப்பட வேண்டும் என்பதால் கரென்ட் பில் போனாலும் பரவாயில்லை என்கிறார்கள்.
ஏசி இல்லாத வீடுகளில் வடிவேல் காமெடியை போல் அடியே மாலாதாங்க முடியலை, ஃபேனை 12 ஆம் நம்பர்ல வை என சொல்லும் அளவுக்கு அனல் கக்குகிறது. தீப்பிழம்பு உடலில் பட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. காலை, மதியம்தான் இப்படி இருக்கிறது என பார்த்தால் மாலை நேரத்திலும் குளிர்ந்த காற்றே இல்லை. கடந்த திங்கள்கிழமை முதல் முறையாக வெப்பநிலை சென்னையில் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.
நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இது சென்னையில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரத்தின்போது ஏற்படும் வெயிலின் அளவை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. இந்த திடீர் வெயிலின் தாக்கத்திற்கு காரணம் மோக்கா புயல் என சொல்லப்படுகிறது.

மோக்கா புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடதிசையில் நகர்ந்து சென்ற போது தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதத்தின் அளவு குறைந்துவிட்டது. தற்போது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளது. வறண்ட காற்றால் ஏற்படும் வெப்பம் அழுத்தம் காரணமாக அசவுகரியமான சூழல் உருவாகியுள்ளது.
2 அல்லது 3 நாட்களில் இதே நிலை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறுகையில் வெயில் அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மோக்கா புயல், காற்றில் ஈரப்பதம் இல்லாதது, வறண்ட காற்று வீசுவது உள்ளிட்டவைகள் ஆகும். செவ்வாய்க்கிழமை நுங்கம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸாக இருந்தது. 2020 ஆம் ஆண்டு மே 20 ஆம்தேதி நுங்கம்பாக்கத்தில் 41.8 டிகிரி செல்சியஸாக வெப்பம் பதிவாகியிருந்தது என்றார். எனவே காலை 11 மணிமுதல் மாலை 4 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்கிறார்கள். உணவு டெலிவரி செய்வோர், ஆப் மூலம் ஆர்டர் செய்யப்படும் மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்வோர், சேல்ஸ்மேன்கள் உள்ளிட்டோர் இந்த வெப்பத்தால் அவதியடைகிறார்கள்.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications