கதவை சாத்திய காதலி.. திருப்பத்தூர் ஜன்னலில் பறந்து வந்த தீக்குச்சி.. உயிரோடு கொளுத்தப்பட்ட மஞ்சுளா
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நத்தம் பகுதியில் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரம் அடைந்த காதலன் பெட்ரோல் ஊற்றி அவரை உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டார்.. இது தொடர்பாக அந்த பெண்ணின் கள்ளக்காதலனை திருப்பத்துபோலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூரை அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் என்பவருடைய மனைவி மஞ்சுளா. இவருக்கு 42 வயதாகிறது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். கமலேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனார். இதையடுத்து கணவனை இழந்த மஞ்சுளாவிற்கு,அதேப் பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியான குப்பன் (51) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

குப்பனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். இதனிடையே குப்பன் மஞ்சுளா இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன், மனைவி போல் வாழத்தொடங்கினர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளாவும், குப்பனும் ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டனர்.
இதனிடையே குப்பனும், மஞ்சுளாவும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்த காலக்கட்டத்தில், மஞ்சுளாவிற்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் குப்பன் செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதனை குப்பன் திருப்பி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மஞ்சுளாவிற்கும், குப்பனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறதுது. அப்போது ஆத்திரமடைந்த குப்பன் கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மஞ்சுளாவின் மீது ஊற்றினாராம். உடனே மஞ்சுளா குப்பனை வீட்டில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டி தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் விடாத குப்பன், கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து வேகமாக கொளுத்தி ஜன்னல் வழியாக தீப்பற்றிய நிலையில் தீக்குச்சியை போட்டுள்ளார். இதில் உடல் முழுவதும் தீ பரவி மஞ்சுளா அலறி துடித்திருக்கிறார்.
மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, மஞ்சுளாவை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் குப்பனை கைது செய்தனர். குப்பனுக்கும் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள்.இந்த கொலை தொடர்பாக திருப்பத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை கள்ளக்காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications