திமுகவின் திராவிட நாடு கோரிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த 1962 சீனா யுத்தம்.. ப்ளாஷ்பேக்
திமுகவின் திராவிட நாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது 1962-ம் ஆண்டு சீனா யுத்தம்.
சென்னை: 1962-ல் சீனாவுடனான நடந்த யுத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாக உடைத்தது எனில் திமுகவின் தனி திராவிட நாடு கோரிக்கையையும் கைவிட வைத்தது.
நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே தந்தை பெரியார் முன்வைக்கப்பட்ட முழக்கம் தமிழ்நாடு தமிழருக்கே. அன்றைய சென்னை மாகாணம் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி பேசும் மக்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.

திராவிட நாடு
இதனால் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை பெரியார் முன்வைத்தார். 1949-ல் தந்தை பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதன் முதன்மையான கோரிக்கை தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு அமைப்பதுதான்.

தேர்தல் அரசியல்
அதேநேரத்தில் தேர்தல் அரசியலை புறக்கணித்து வந்தது திமுக. பின் 1957-ல் தேர்தலில் களமிறங்குவது என முடிவு செய்து போட்டியிட்டது.

அடைந்தால் திராவிடநாடு...
அப்போதும் கூட திமுகவின் பிரதான கொள்கையாக இருந்தது 'அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு' முழக்கம்தான். 1962-ம் ஆண்டு நாட்டின் மீது சீனா போர் தொடுத்தது.

நேரு மிரட்டல்
அப்போது பிரதமர் நேரு, பிரிவினை கோரும் இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து தனி திராவிட நாடு கோரிக்கையை கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். அதன் பின்னர் எழுந்ததுதான் மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம்.












Click it and Unblock the Notifications