'நான் ஏன் போட்டியிடவில்லை': இது தான் ஜி.கே.வாசன் சொன்ன விளக்கம்
சென்னை: மக்களவை தேர்தலில் தான் ஏன் போட்டியிடவில்லை என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக கரை சேர முடியாது என நினைத்த அக்கட்சியின் மத்திய அமைச்சர்களும், மாநில தலைவர்களும் திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலர வேண்டும் என ரகசிய முயற்சி எடுத்தனர். மேலும், டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தமிழகம் வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினர். ஆனால் அது தேல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மற்றும் முன்னாள் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் பகிரங்கமாக அறிவித்தனர். இது கட்சியில் ஒரு புறம் வரவேற்பையும் மறுபுறம் கடும் விமர்சனங்களையும் கிளப்பியது. இந்த நிலையில் தான் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற காரணத்தை அவரது ஆதரவாளர்களிடம் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அது என்னவென்றால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நல்ல கூட்டணி அமைக்க வேண்டும். அது வெற்றிக் கூட்டணியாக இருக்க வேண்டும் என விரும்பினோம். மூத்த தலைவர்களும், அதிக அளவில் இளைஞர்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று தான் நினைத்து அதற்கான பணிகளில் இறங்கி செய்து வந்தோம்.
ஆனால் அகில இந்திய தலைமை தமிழக தலைவர்களின் கருத்துக்களை கேட்பதும் இல்லை. அதை தாங்களாவே முன்வது சொன்னாலும் எடுத்துக் கொள்வதில்லை. இப்படி இருந்தால் என்ன செய்வது. அது சரி போனால் போகட்டும். தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பது உறுதி. அது போல நானும் சென்னை அல்லது மற்ற தொகுதி ஏதாவது ஒன்றில் நிற்க உறுதி பூண்டு இருந்தேன்.
ஆனால் நீங்கள் தேர்தலில் நின்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான ஆதரவாளர்கள் எங்கள் தொகுதியில் கட்சிப் பணி செய்ய மாட்டார்கள். எல்லோரும் உங்கள் தொகுதிக்கு வந்துவிடுவார்கள். அப்புறம் எங்கள் கதி அதோ கதி தான். இப்போது உள்ள சூழ்நிலையில் நாம் மரியாதையான வாக்குகளை வாங்கினால் தான் நமக்கும் சரி, காங்கிரஸ் கட்சிக்கும் சரி மரியாதையாக இருக்கும். எனவே, நீங்கள் போட்டியிடுவதை சற்று யோசியுங்கள் என சிலர் கூறினார்களாம்.
இதையடுத்தே தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தாராம் வாசன்.
-
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications