ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ. போட்டியிட முடிவு செய்தது ஏன்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: நகர்ப்புறங்களிலும் அண்ணா தி.மு.க.வுக்கு அதிகரித்துள்ள செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவே சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக முடிவு செய்துள்ளார்.

- பொதுவாக சென்னை தொகுதிகள் அனைத்தும் தி.மு.க.வின் கோட்டை என்றே நிரூபிக்கப்பட்டு வந்தது. இதனால்தான் சேப்பாக்கத்தில் கருணாநிதி, ஆயிரம் விளக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வந்தனர்.
- அதே நேரத்தில் ஜெயலலிதாவோ சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர மண்டலங்களில் அதாவது கிராமங்களை உள்ளடக்கிய தொகுதிகளை இலக்கு வைத்து போட்டியிட்டு வென்று வந்தார். கிராமங்களில் எம்.ஜி.ஆரின் இரட்டை இலைக்கு தொடரும் செல்வாக்கை நம்பி அவர் களமிறங்கி வந்தார்.
- ஆனால் அண்மைக்காலமாக சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற இமேஜ் தகர்ந்து போனது. குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் சென்னையில் திமுக படுதோல்வியைத் தழுவியது.
- இதனை முன்கூட்டியே உணர்ந்துதான் என்னவோ கருணாநிதி சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டார்.. ஸ்டாலின் சென்னை புறநகரான கொளத்தூருக்கு ஜாகையை மாற்றினார்..
- லோக்சபா தேர்தலிலும் சென்னை தி.மு.க.வுக்கு கைகொடுக்கவில்லை. சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற காலம் மலையேறிப் போய் அண்ணா தி.மு.க. வசமாகிவிட்டது என்று கூறும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது.
- அதாவது நகர்ப்புறங்களிலும் தங்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்பதற்காக சென்னை நகரின் தொகுதிகளில் ஒன்றாக ஆர்.கே.நகரில் துணிச்சலாக களமிறங்க ஜெயலலிதா முடிவு செய்திருக்கிறாராம்..
- அத்துடன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நீண்ட தூரம் பயணித்து பிரசாரம் செய்வதைத் தவிர்க்கும் வகையிலும் சென்னை நகருக்குள் ஒரு தொகுதியை ஜெயலலிதா தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது...
ஆக அவ்ளோ மகிழ்ச்சியில் அண்ணா தி.மு.க.!!












Click it and Unblock the Notifications