ஊரில் ஏகப்பட்ட பஞ்சாயத்து... கே.வி.ராமலிங்கம் பஞ்சர் ஆன கதை

பொதுப்பணித்துறை என்ற முக்கியப் பொறுப்பை வைத்திருந்தவர் ராமலிங்கம். ஆனால் அங்கு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக பொதுப்பணித்துறை ஊழியர்களிடம் அதிருப்தியை சம்பாதித்தார். அவர் மீது ஏகப்பட்ட புகார்களும் முதல்வரிடம் குவிந்தன.
துறை சார்ந்த புகார்கள் தவிர அவர் சார்ந்த ஈரோடு மாவட்டத்திலும் அவரது செயல்பாடுகள் குறித்து முதல்வருக்குப் புகார்கள் போயின. இதையடுத்து பொதுப்பணித்துறைய அவரிடமிருந்து பறித்த முதல்வர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையை ஒப்படைத்தார்.
இந்த நிலையில் தற்போது ஈரோடு நகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியையும் ஜெயலலிதா பறித்துள்ளார். இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாக சமீபத்தில் அமைச்சர் ராமலிங்கம் மீது ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் புகார் அளித்தார். மேலும், தாராபுரம் நகராட்சி கடை ஏல விவகாரத்திலும் அமைச்சர் மீது புகார் கூறப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகராட்சி கடைகளை மறுஏலம் விடுவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. நகராட்சிக்கு சொந்தமான 207 கடைகளை மறுஏலம் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் தலைவர், துணைத்தலைவர் இடையே பிரச்னை ஏற்பட்டதால், மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ராமலிங்கத்திடம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர், தீர்மானத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போடும்படி கூறியதாக தெரிகிறது. கடைகளுக்கு மறுஏலம் நடத்தாவிட்டால் வரி உயர்வு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் தாராபுரத்தில் அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து வரும் 9ம் தேதி கடையடைப்பு, உண்ணாநிலை போராட்டம் நடத்துவதாக முடிவு செய்துள்ளனர். தமிழக முதல்வருக்கு தாராபுரம் நகர மன்றத்தில் உள்ள அதிமுகவின் கோஷ்டிபூசல், அமைச்சரின் தலையீடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் அமைச்சருக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு நடந்திருக்கலாம் என பேசப்படுகிறது.
ராமலிங்கம் இப்படியே நடந்து வந்தால் அடுத்து இருக்கிற அமைச்சர் பதவியும் பறிபோய் விடும் என்று அவரது எதிர்ப்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications