மோடி ஏன் இன்னும் ஜெயலலிதாவை பார்க்கவரவில்லை.. திருநாவுக்கரசர் கேள்வி!
சென்னை:பல நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவை ஏன் பார்க்கவரவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பின் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனை மரியாதை நிமித்தமாக திருநாவுக்கரசர் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொது செயலாளரும் எம்.எல்.ஏ.-வுமான அபூபக்கரும், கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், தமிழக அரசில் ஏற்பட்டுள்ள இலாகா மாற்றங்கள் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தமிழக அரசும், ஆளுநரும் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
முதல்வரை ராகுல் காந்தி சந்திக்க வந்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லையென்று குறிப்பிட்ட அவர், பல்வேறு மாநிலங்களுக்கும் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவை ஏன் பார்க்கவரவில்லை என கேள்வி எழுப்பினார். எம்ஜிஆருக்கு உடல்நலம் பாதித்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பல்வேறு உதவிகளை செய்தார் என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications