பதவியேற்பு விழா... ஜெயலலிதாவுக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுக்காதது ஏன்?
சென்னை: பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்காத காரணத்தால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பதவியேற்பு விழாவுக்கு அவர் அழைக்கவில்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பாட்னாவில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இவ்விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்கள் 30க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது மமதா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவையும் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. தலைவருக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருந்தார். இதனடிப்படையில் பாட்னா பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றேன்.
நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதில் அரசியல் இல்லை. பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் வெற்றி பெற்ற போது அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் தம்முடைய பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதாவை நிதிஷ்குமார் அழைக்கவில்லை.
மழை வெள்ள நிவாரண நிதியை தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்த அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை கண்டு மக்கள் ஏமாறப்போவதில்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்காத காரணத்தால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பதவியேற்பு விழாவுக்கு அவர் அழைக்கவில்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
-
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தாய் சிறுத்தைக்கு ஷாக்..திமுகவுக்கு தாவும் குட்டி சிறுத்தைகள்! ‘யோசிக்கும்’ தலையும் ’ஊர்’ புள்ளியும் -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
50 ஆண்டு விசுவாசம்! திருப்பூரில் கழகத்திற்குள் கலவரம்.. விலகிய மா.செ மீண்டும் திமுகவில் ஐக்கியம்! -
அவங்கவங்க வேலையை பார்ப்போம்..திமுக - காங்கிரஸ் சண்டை நல்லதுக்கில்லை! திருநாவுக்கரசர் சீரியஸ் அட்வைஸ் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
உதயசூரியன் வேண்டாமா? எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு போங்க.. ஜவாஹிருல்லாவிற்கு திமுக எதிர்ப்பு -
வசமாக சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்? வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்.. விஜய் கையில் முடிவு -
பிரசாந்த் கிஷோர் நிலைமையை பாருங்க.. பாஜக தேசிய தலைவரின் கோட்டையில் போட்டியிட முடிவு? கட்சியை காப்பாத்த அக்னி பரீட்சை












Click it and Unblock the Notifications