For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. வீட்டில் ரெய்டு.. அமைச்சர்கள் எட்டிப் பார்க்காதது ஏன்...?

Google Oneindia Tamil News

சென்னை: மாண்புமிகு இதயதெய்வம் அம்மாவின் ஆட்சி என்று வாய்க்கு வாய் கூறி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள் யாருமே போயஸ்தோட்ட சோதனை குறித்து சின்ன அதிர்ச்சி கூட தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதா விசுவாசிகள்தான் நடப்பதைப் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். தினகரன் ஆதரவாளர்கள் ஒப்புக்காக கோஷம் போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொள்ளும் தலைவர்கள் யாருமே இதைக் கண்டு கொள்ளவில்லை.

Why no one raised voice against Poes Garden IT raids

எங்க அம்மா வீட்டில் ரெய்டா என்று யாருமே ஷாக் கொடுக்கவில்லை. ஒரு அமைச்சரைக் கூட போயஸ் தோட்டத்தின் பக்கமாக காண முடியவில்லை. ஆட்சியாளர்கள் மத்தியில் இதுகுறித்து எந்தவிதமான ரியாக்ஷனையும் காணவில்லை.

இதிலிருந்தே இந்த சோதனை குறித்த அவர்களின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. வாயை மூடிக் கொண்டு பேசுமாறு அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஜெயலலிதா விசுவாசிகள் புலம்பிக் கொண்டுள்ளனர்.

English summary
Not even a single word uttered against the Poes Garden IT raids from the TN Govt and ADMK leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X