கருணாநிதியை பிரதமர் மோடி திடீரென சந்தித்தது ஏன்? பரபர பின்னணி
திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை வருகை தந்த பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மத்திய அரசுக்கு எதிராக திமுக சற்றே அடக்கி வாசித்தது. ஒருகட்டத்தில் பாஜகவை பகிரங்கமாகவே திமுக எதிர்க்கத் தொடங்கியது.

முரசொலி அலுவலகம் விசிட்
கருணாநிதியின் சட்டசபை வைரவிழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை பங்கேற்க வைத்து பாஜகவுக்கு எதிரான பிரமாண்ட கூட்டணிக்கும் திமுக அடித்தளம் போட்டு வைத்தது. இந்த நிலையில் கருணாநிதி உடல்நலம் தேறி முரசொலி அலுவலகம் சென்றார்.

மோடியும் சந்திக்கிறார்
பின்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் சென்னை வந்த பிரதமர் மோடி இன்று திடீரென கருணாநிதியை சந்தித்து பேசினார்.

திடீர் சந்திப்பு
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் இருந்த நிலையில் கருணாநிதியை பிரதமர் மோடி சந்திக்கும் திட்டம் அரங்கேறியது. இதையடுத்து ஸ்டாலின் அவசரமாக சென்னை திரும்பினார்.

அருண்ஜேட்லி கோரிக்கை
இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் பிரதமர் மோடி வர வேண்டும் என விரும்பியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட மத்திய அமைச்சர் அருண்ஜேட்லிதான் கருணாநிதியையும் சந்திக்கலாமே என பிரதமர் மோடியிடம் கூறினாராம்.

பாஜகவை நெருங்க முயற்சி
இதனை ஏற்றுதான் கருணாநிதியை சந்திப்பது என பிரதமர் மோடி முடிவு செய்தாராம். நீண்டகாலமாக பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இப்படியான சந்திப்பால் படு உற்சாகமாக இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications