நிர்மலா தேவியை பொத்திப் பொத்தி பாதுகாக்கும் போலீஸ்.. !

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலா தேவியை போலீஸார் படு பாதுகாப்பாக கோர்ட்டுக்கு அழைத்து வருவதை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டே இன்று அதிசயத்துடன் வேடிக்கை பார்த்தது.

ஏன் இவருக்கு இத்தனை பாதுகாப்பு, முக்கியத்துவம் என்று பலரும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டனர். நிர்மலா தேவி விவகாரம் பெரும் புதிராகவே இன்று வரை உள்ளது. எதற்காக இவர் மாணவிகளை படுக்கைக்கு அழைத்தார் என்பது பெரும் குழப்பமாக உள்ளது. யாருக்காக அழைத்தார் என்பதிலும் தெளிவு இல்லை.

இவர் கொடுத்ததாக வெளியான வாக்குமூலத்தில் 2 பேருடன் நிறுத்திக் கொண்டார். அது முருகன் மற்றும் கருப்பசாமி. ஆனால் அதையும் தாண்டி பல்வேறு விவகாரங்கள் நிர்மலா தேவிக்குள் அடக்கமாக உள்ளதாக கருதப்படுகிறது. அதையே முருகன் தரப்பும் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறது.

Why Police give huge importance to Nirmala Devi?

["ஆ"... தளங்களை அடியோடு முடக்கிய மத்திய அரசு.. யூடியூபை தேடி ஓடும் ஆபாசகர்கள்! ]

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டுக்கு நிர்மலா தேவி அழைத்து வரப்பட்டார். இன்றும் அழைத்து வரப்பட்டார். அவரை அழைத்து வந்தபோது போலீஸார் மிகுந்த பாதுகாப்புடன் கூட்டி வந்தனர். யாரும் அவருடன் பேசி விடாத வகையில் அரண் அமைத்து கூட்டி வந்தனர்.

இன்று அவரை நீதிபதிகள் வரும் பாதையில் கூட்டிச் சென்றது அனைவரையும் வியக்க வைத்தது. அந்த அளவுக்கு நிர்மலா தேவி விஐபியா.. இளம் பிள்ளைகளை ஆபாச வழிக்கு அழைத்துச் சென்ற இவருக்கு எதற்கு இத்தனை முக்கியம் என்று பலரும் முனுமுனுத்தனர். ஆனால் நிர்மலா தேவி தப்பித் தவறிக் கூட யாரிடமும் எதையும் பேசி விடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதையில் போலீஸார் இருப்பதாக மற்றவர்கள் சொல்கிறார்கள்.

எப்படியோ நிர்மலா தேவியும் விஐபியாகி விட்டார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+