அதே அதிமுக அரசுதான்.. ஜெ. விஷயத்தில் ஆமை வேகம், 18 எம்எல்ஏக்களிடம் புயல் வேகம்!
ஜெயலலிதா தகுதி இழப்புக்காக 2 மாதம் காத்திருந்த சபாநாயகர் தற்போது 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததில் அவசர கோலம் காட்டியது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியை காலி என அறிவிக்க 2 மாதம் காலதாமதமாக செய்த சபாநாயகர், தற்போது 18 பேர் தகுதிநீக்கம் விவகாரத்தில் அவசரம் காட்டியது ஏன் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜெயலலிதா இருந்த போது இருந்த ராணுவ கட்டுப்பாடு தற்போது இல்லாமல் போய்விட்டது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஜெயலலிதா இருந்த போது யாரும் ஊடகங்களுக்கு பேட்டி கூட அளிக்கமாட்டார்கள்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. தினகரனுக்கும், எடப்பாடிக்கும் இடையே உள்ள மோதல் போக்காக அனைத்து முடிவுகளும் மின்னல் வேகத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.

சொத்து குவிப்பு
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டபோது கடந்த 2014-ஆம் ஆண்டு செப் 27-ஆம் தேதி அவரது எம்எல்ஏ பதவி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

ஆமை வேகம்
இதைத் தொடர்ந்து அந்த தொகுதி 2 மாதங்கள் கழித்து அதாவது நவம்பர் 8-ஆம் தேதி காலியாக இருப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த தாமதத்திற்கு என்ன காரணமாக இருக்க முடியும். அரசு தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதா என்று அப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

18 பேர் தகுதி நீக்கம்
ஆனால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 18 பேரை சபாநாயகர் நேற்று காலை தகுதி நீக்கம் செய்தார். ஆனால் அன்று மாலையே அந்த 18 பேரின் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு மின்னல் வேகத்தில் வருகிறது.

ஏன் இந்த முரண்பாடு?
ஜெயலலிதா விஷயத்தில் ஆமை வேகத்தில் செயல்பட்ட ஆட்சியாளர்கள், தற்போது இந்த 18 பேர் விஷயத்தில் அவசர கதியில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிடுவது ஏனோ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications