தமிழ்நாட்ல, இந்த சமயத்துல ஏன் இவ்ளோ மழை தெரியுமா..? ரமணன் சொல்றதைக் கேளுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லட்சத் தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகத்தான் தமிழகம் முழுக்க மழை பெய்து வருவதாக வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயில் படாத பாடுபடுத்தி வந்த நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வாராது வந்த மாமணி மாதிரி மக்கள் இந்த மழையைக் கொண்டாடினர்.

Why Tamil Nadu gets Rain now? Here is Ramanan's explanation

குறிப்பாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இந்த மழை தந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

இன்றும் இந்த மழை தொடருமா? என்ன சொகிறார் ரமணன் என்பதுதான் பலரது கேள்வியும்.

Why Tamil Nadu gets Rain now? Here is Ramanan's explanation

"லட்சத்தீவின் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

Why Tamil Nadu gets Rain now? Here is Ramanan's explanation

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சம் 24 டிகிரி வெப்பமும் நிலவும்" என்கிறார் ரமணன்.

அவர் வாய் முகூர்த்தம்... காலையிலிருந்து சென்னையில் நல்ல வெயில். மற்ற பகுதிகளிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+