பொங்கலுக்கு ரூ.1000 பரிசு வழங்குவது உறுதி.. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்
சென்னை: பொங்கலை ஒட்டி வழங்கப்படும் பரிசுத்தொகுப்புடன் ₹1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதேபோல் இத்தனை நாட்களாக இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் எல்லா வருடமும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023 வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.

அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. கரும்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரும்பு விநியோகம் செய்யப்படவில்லை என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக அரசியலாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மாற்றம்: முக்கியமாக அதிமுக சார்பாக இதற்கு எதிராக போராட்டமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு கரும்புகளை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுப்போம் என்று அறிவித்தது. கரும்புடன் சேர்த்து 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.
இந்த வருட பரிசு: இதையடுத்து இந்த வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு. அதன்படி, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும்.
இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கிட 31.12.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அப்படி செய்யும் பட்சத்தில் தோராயமாக ரூ.238,9272747- (ரூபாய் இருநூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு இலட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று மட்டும்) செலவினம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் பரிசுத்தொகை: இந்த நிலையில்தான் மீண்டும் 2024ம் வருட பொங்கல்.. அதாவது அடுத்த மாதம் வர உள்ள பொங்கலுக்காக தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொங்கலை ஒட்டி வழங்கப்படும் பரிசுத்தொகுப்புடன் ₹1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்த போது மொத்தமுள்ள 2.20 கோடி ரேஷன்கார்டுதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் நேரடியாக ரொக்கமாக பணத்தை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இரண்டு 500 ரூபாய் தாள்கள் மூலம் பணத்தை கொடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இத்தனை நாட்களாக இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
என்ன காரணம்: எதிர்பாராத புயல் வெள்ளத்தால் தமிழ்நாடு அரசு நெல்லை, தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரூ. 6000 நிதி ஒதுக்கியது. ரேஷன் கடைகளில் ரூ. 6000 வழங்கப்பட்டது. தென் காசி, கன்னியாகுமரியில் ரூ. 1000 வழங்கப்பட்டது.
அதேபோல் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 மாதம் மாதம் வழங்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கூடுதல் நிதி நெருக்கடி காரணமாகவே இந்த முறை பொங்கலுக்கு பணம் வழங்குவதில் தமிழ்நாடு அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்தது. இதன் காரணமாக தீவிர ஆலோசனைக்கு பின்.. பணம் கொடுப்பது தொடர்பான முடிவை முதல்வர் ஸ்டாலின் இன்று எடுத்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications