மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமாகா விலகியது ஏன்? சொல்கிறார் ஜிகே வாசன்
ஈரோடு: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமாகா விலகியது ஏன் என்பதற்கு என தமாகா தலைவர் ஜிகே வாசன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 மாவட்ட த.மா.கா. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோடு திண்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமாகா தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் தமாகா தலைவர் ஜிகே வாசன் கூறுகையில், சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், அடுத்ததாக உள்ளாட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்து மண்டல அளவில் கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்த உள்ளோம். இதற்காகத் தான் மக்கள் நல கூட்டணியில் இருந்து தமாகா விலகுவது என முடிவு செய்தோம்.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்வதில் எந்தவித குளறுபடியும் ஏற்படாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். சட்டசபை தேர்தல் நேரத்தில், திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது என்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் தமாகா மாநில இளைஞர் அணி செயலாளர் யுவராஜ், பொதுச்செயலாளர் விடியல் சேகர், உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications