மத்திய அரசை விமர்சிக்காதீங்க... எடப்பாடியின் 'திடீர்' உத்தரவுக்கு காரணம் இதுதான்!
மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என அமைச்சர்களுக்கும் அதிமுகவினருக்கும் முதல்வர் எடப்பாடி திடீர் என உத்தரவிட்டிருப்பது டெல்லியை சமாதானப்படுத்ததான் என்கிறது கோட்டை தகவல்கள்.
சென்னை: மத்திய அரசை யாரும் விமர்சித்து பேசக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருப்பதே டெல்லியின் கோபத்தை தணிக்கத்தான் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
கோட்டையில் அண்மையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைவிட தலைப்புச் செய்தியாக இருந்தது 'எடப்பாடியின் திடீர் உத்தரவுதான்'.

எடப்பாடி உத்தரவு
அதாவது மத்திய அரசை விமர்சித்து யாரும் பேச வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடியார் உத்தரவிட்டார் என்பதுதான் முதல் பக்க செய்திகளில் இடம் பிடித்தது. அதேபோல் அதிமுகவினருக்கும் உத்தரவிடப்பட்டது. இதற்கு காரணமே சசிகலாவின் கணவர் நடராஜன் என கூறப்படுகிறது.

ஓடும் நடராஜன்
தாம் செய்த லாபிகளால் கடுப்பாகிப் போன டெல்லி தமக்கு குறிவைத்துவிட்டதால் ஓடிக் கொண்டிருக்கிறார் நடராஜன். இப்படி ஓடிக் கொண்டே சில காய்நகர்த்தல்களையும் செய்து வருகிறார்.

சமிக்ஞைதானாம்...
இதில் ஒன்றுதான் தமிழக அரசு உங்களை எதிர்க்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்கிற சமிக்ஞை. அதனால்தான் இச்செய்தியை முதல் பக்கத்தில் போடுங்கள் என பத்திரிகைகளுக்கு தமிழக அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம்.

துரத்தும் வரை விடாது கருப்பு
ஆனாலும் இந்த பூச்சுற்றுதல் வேலையை நம்பி டெல்லி ஏமாறாது என்றே கூறப்படுகிறது. ஒட்டுமொத்த சசிகலா கோஷ்டிக்கு லாடம் கட்டி அரசியலைவிட்டே துரத்தும் வரை டெல்லி ஓய்ந்துவிடாது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications