மன்னார்குடி பரம்பரையில் முதல் எம்எல்ஏ: பட்ஜெட்டில் பங்கேற்பதை தவிர்த்தது ஏன்?
மன்னார்குடி பரம்பரையில் முதல் எம்எல்ஏவான தினகரன் தமிழக பட்ஜெட்டில் பங்கேற்காமல் இருந்தது ஏன்.
Recommended Video

சென்னை: மன்னார்குடி பரம்பரையில் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தினகரன் பட்ஜெட் கூட்டத்
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினகரன் தனது கையில் 18 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க நினைத்தார். ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுகவையும் , இரட்டை இலையையும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து காலியாக இருந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார் தினகரன். அதிமுகவு, தினகரன் அணியும் பரஸ்பரம் டெபாசிட் வாங்கமாட்டார்கள் என்று கூறி கொண்டன. எனினும் இந்த தேர்தலில் ஆளும் கட்சியையே ஆச்சரியப்படுத்தும் வகையில் தினகரன் பெருவாரியான வாக்குகளை பெற்றார்.

மன்னார்குடியில் முதல் எம்எல்ஏ
மன்னார்குடியில் முதல் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றார் தினகரன். அதன் பின்னர் 2018-ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரில் தினகரன் கலந்து கொண்டார். அப்போது அந்த அவையில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இதை வைத்து தினகரன் ஆதரவாளர்கள் டிடிவி வருவதை அறிந்து சட்டசபையே காலியாக உள்ளது என்று கூறினர்.

குனிந்து சிரிக்கிறார்கள்
இதுகுறித்து எம்எல்ஏ தினகரன் கூறுகையில் என்னை நேருக்கு நேர் பார்க்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு சங்கடம் ஏற்பட்டது. இன்னும் சிலருக்கு பயமும் உள்ளது. இதனால் என்னை பார்த்து நேரடியாக சிரிக்காமல் குனிந்து கொண்டு சிரிக்கிறார்கள் என்று தினகரன் தெரிவித்திருந்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்தல்
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதில் தினகரன் பங்கேற்கவில்லை. அதற்கு மாறாக மதுரையில் தனது தனி அணியை அறிவித்தார். எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் பட்ஜெட், மேலும் ஆர்கே நகர் என்பது மீனவ மக்கள் அதிகம் உள்ள தொகுதி, இதில் அந்த தொகுதி எம்எல்ஏ கலந்து கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்
பட்ஜெட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று தினகரன் நினைத்திருந்தால் அவர் வேறு ஒரு நாளில் தனது கட்சி குறித்த அறிவிப்பை அறிவித்திருக்கலாம். ஆனால் பட்ஜெட் இன்று நடைபெறுகிறது என்று தெரிந்தே இதுபோல் தினகரன் செய்வது எந்த விதத்தில் நியாயம். ஜெயலலிதா சிலை திறப்பு விவகாரத்தில் அவசர அவசரமாக சிலையை தப்பும் தாளமுமாக திறந்தது ஏன் என்றும் இதற்கு பதில் சிலையை நன்கு ஆராய்ந்து வேறு ஒரு நாளில் திறந்திருக்கலாம் என்று தமிழக அரசுக்கு உபதேசம் செய்தவர்தானே தினகரன்.

தினகரன் அதிருப்தி
ஒரு வேளை காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்துக்கு தனக்கு அழைப்பில்லை என்பதால் பட்ஜெட் கூட்டத் தொடரில் தினகரன் பங்கேற்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. எது எப்படியிருந்தாலும் அனைத்து கட்சி கூட்டம் என்பது வேறு, பட்ஜெட் என்பது வேறு என்பதை அறியாதவரா தினகரன் என்ற கேள்வியும் முந்திக் கொள்கிறது. எது எப்படியோ வீம்புக்காக மக்கள் பிரச்சினை சார்ந்த விவகாரங்களில் தினகரன் கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications