சிவகங்கை அருகே பரவும் விஷ காய்ச்சல்.. பீதியின் பிடியில் மக்கள்.. வீட்டை விட்டு வெளியேறும் அவலம்
விஷக்காய்ச்சலுக்கு வீட்டை விட்டு மக்கள் வெளியேறி வருகிறார்கள்.
Recommended Video

சிவகங்கை: சிவகங்கை அருகே பரவிவரும் விஷக்காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சிவகங்கை நகரில் 27 வார்டுகள் உள்ளது. இதில் ஒன்றாவது வார்டு முத்துசாமி நகரில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. முத்துச்சாமி நகர் முதல் தெருவில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாததால் கழிவு நீர் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கிறது. அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் புழுக்கள் வெறியேறி வருகின்றன.

கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி மக்களை இரவில் உறங்கவிடுவதில்லை, கொசுக்கடிக்கு ஆளான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் விஷக்காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளனர். கொசுக்கள் கடித்து குழந்தைகளுக்கு உடல் முழுவதும் வீக்கங்கள் ஏற்பட்டுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்பட்டு அவதிப்படுகின்றன. முதியவர்கள், பெண்கள் கை, கால்கள் வீங்கி நடமாட முடியாமல் கடந்த 20 நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்களில் ஒருவரான சரண்யா கூறுகையில், கொசுக்கடியால் குழந்தைகள் உடலில் முழுவதும் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. முதலில் லேசான காய்ச்சல் நினைத்து அம்மை நோய் என நினைத்தேன். குழந்தை சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தது. பின்னர் திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனையில் இது ஒரு வித விஷக் காய்ச்சல் என தெரியவந்தது' என்றார்.
மேலும் ஜவஹர் என்பவர் கூறுகையில், இந்த தெருவில்தான் முன்னாள் அமைச்சர் செ. மாதவன், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இருந்தனர். விஐபி-க்களின் வார்டாக இது இருந்தது. தற்போது முள் காடாகவும், மாத கணக்கில் தெருவிளக்கு எரியவில்லை, மின்கம்பம் வீட்டின் மேல் சாய்ந்து உயிர்க்கு ஆபத்தான நிலையில் உள்ளோம். பெயரளவிற்கு மட்டுமே மருத்துவ முகாம் நடத்தினார்கள். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சொந்த வீட்டை விற்று விட்டு, வாடகை வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் முத்துசாமி நகர் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி உள்ளதாக கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications