கணவரை இழந்த பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்த வாலிபர்.. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: 25 வயதான கணவரை இழந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் ஊர்மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் மாவட்டத்தில் எரகாடு என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் 25 வயதான இளம் பெண். கணவரை இழந்தவர். இவர் நேற்று இரவு வீட்டில் வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த போது, 30 வயதுள்ள கார்த்திக் என்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Widow raped in Tamil Nadu

இதனையடுத்து, பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதனிடையே, காலதாமதம் இல்லாமல் குற்றவாளியை உடனடியாக பிடித்து தண்டிக்க வேண்டும் என்று கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தின் முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, குற்றவாளி விரைவில் பிடிக்கப்படுவார் என்று போலீசார் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து ஊர் மக்கள் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+