என் புருஷன் கொலைகாரனா.. அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் தனது கணவர் இரட்டைக் கொலைகளைச் செய்தவர் என்று தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது ஆசிரியை மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தை சேர்ந்தவர் உஷா. இவர் கடந்த ஜீலை மாதம் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்ட 30வது நாள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சித்தேரியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் அரக்கோணத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த அவரது மகள் தமிழ்செல்வியை சோளிங்கர் அடுத்த பாராஞ்சி என்ற இடத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு இருந்தார்.

இரண்டு வழக்குகளையும் இரு ஊர் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சித்தேரியைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்தான் இருவரையும் கொன்றது தெரிய வந்தது. இந்த நிலையில் சுரேஷ் பாபுவின் மனைவி கலைவாணிக்கு இது தெரிய வந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் ஆசிரியை ஆவார்.
தனது கணவர் கொலைகாரர், அதுவும் இரட்டைக் கொலைகளைச் செய்தவர், அதுவும் பெண்களைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்தவர் என்று அறிந்ததும் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து நேற்று தனது வீட்டில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications