செல்போன் பேச்சால் வினை: சந்தேகப்பட்டு ஊரை கூட்டிய கணவன்.. தூக்குபோட்ட மனைவி.. திருச்சி அருகே சோகம்
Recommended Video

திருச்சி: செல்போன் பேச்சு தொடர்பான சந்தேகத்தில் ஏற்பட்ட சண்டையில் இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி அருகே நடந்துள்ளது.
திருச்சி-திண்டுக்கல் சாலை இனாம்மாத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் வேலுச்சாமி (30). பிளம்பர். ஐஸ்வர்யா (21) என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் ஒரு செல்போன் அழைப்பால், தம்பதிகளுக்குள் சண்டை ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை வேலை விஷயமாக வேலுச்சாமி திருச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது, ஐஸ்வர்யா யாருடனோ செல்போனில் பேசியதை பார்த்து வேலுச்சாமி சந்தேகமடைந்துள்ளார்.

செல்போனால் தகராறு
வேலுச்சாமி இதுகுறித்து கேட்டதற்கு தனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் என்று ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார். சந்தேகம் தீராத வேலுச்சாமி, ஐஸ்வர்யாவிடம் போனை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, ஐஸ்வரியா அவசர அவசரமாக பேசிய நம்பரை கால் பதிவில் இருந்து அழித்துவிட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.

கணவன்-மனைவி சண்டை
இதை பார்த்து மேலும் சந்தேகப்பட்ட வேலுச்சாமி, ஐஸ்வர்யாவுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளார். ஐஸ்வர்யா தந்தை, தாய்க்கும் அதுபற்றி தகவல் கொடுத்துள்ளார்.
வேலுச்சாமியின் அண்ணன் தகவல் அறிந்து வந்து, தம்பதிகளை சமாதானம் செய்து வைத்துள்ளார். ஆனால், ஐஸ்வர்யாவின் அப்பா, அம்மா வீட்டுக்கு வர வேண்டும் என்று வேலுச்சாமி பிடிவாதம் காட்டியுள்ளார்.

மனைவி தற்கொலை
இதன்பிறகு வேலுச்சாமி கடைத்தெரு சென்ற நேரத்தில், கதவை பூட்டிக்கொண்டு ஐஸ்வர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்த ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வரதட்சணை புகார்
ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். செல்போன் எண்ணை அழித்ததும், பெற்றோர் முன்னிலையில் நியாயம் கேட்பேன் என்று கணவன் சொன்னதும் இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேநேரம், ஐஸ்வர்யா பெற்றோர், இது வரதட்சணை கொடுமையால் நடந்த தற்கொலை என கூறி புகார் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications