மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கணவன் கைது: மாமனார், மாமியாரை போலீஸ் தேடுகிறது

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: மனைவியை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து மிரட்டி வந்தவரை போலீசார் கைது செய்தனர். இதில் மாமனார், மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் அருகேயுள்ள செம்பாறைபுதூரை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் தமிழரசன் (35). இவருக்கும் நல்லிகவுன்டன்புதூரை சேர்ந்த மாலதி (22) என்ற பெண்ணுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த மார்ச் 14ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த 3வது நாளிலேயே கணவன்-மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. மனைவியுடனான படுக்கை அறை காட்சிகளை தமிழரசன் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அதை தனது மனைவியிடம் போட்டு காட்டி தன்விருப்பப்படி நடந்து கொள்ள மிரட்டி உள்ளார்.

மேலும், படுக்கை அறை காட்சிகளை எம்.எம்.எஸ், வாட்ஸ்-அப் மூலம் பலருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் கணவருடன் வாழ பிடிக்காமல் மாலதி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இதுகுறித்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாலதி அளித்துள்ள புகாரில், தனது கணவர் தமிழரசன் தன்னை செல்போனில் படம் பிடித்து மனரீதியாக கொடுமைப்படுத்துகிறார். இதை அவரது தந்தை வீரப்பன், தாய் சரஸ்வதியிடம் கூறியும் தட்டிகேட்கவில்லை. என்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன உளைச்சல் கொடுத்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழரசனை கைது செய்தார். இதற்கு ஆதரவாக செயல்பட்ட வீரப்பன், அவரது மனைவி சரஸ்வதி ஆகிய இருவரையும் போலீ சார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+