தீக்குளிப்பு போராட்டத்தால் கொடுமைக்கார கணவனை சிறைக்கு அனுப்பிய கலியுக கண்ணகி…
சென்னை: கணவரின் கொடுமை தாங்காமல் தீக்குளிப்பு போராட்டம் நடத்தி கணவரை சிறைக்கு அனுப்பிய இளம்பெண்ணால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் உடலில் கெரசின் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று போலீசார் அவரது கணவரை கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம்:
சென்னை ராயப்பேட்டை, அங்கமுத்து நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் தனது தாயார் வசந்தி, உறவினர் சந்துரு ஆகியோருடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.
தீக்குளிக்க முயற்சி:
திடீரென்று கமிஷனர் அலுவலக வாசலில் கவிதா பாட்டிலில் கொண்டு வந்திருந்த கெரசினைத் தனது உடலிலும், தனது தாயார் வசந்தி, உறவினர் சந்துரு உடலிலும் ஊற்றினார். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து தீக்குளிக்க முயன்றனர். அங்கு காவலுக்கு நின்ற போலீசார், தீக்குளிக்க விடாமல் அவர்களை தடுத்தனர்.
கண்ணீர்க் கதை:
அப்போது கவிதா கல்நெஞ்சையும் கரைய வைக்கும் தனது கண்ணீர் கதையை போலீசாரிடம் தெரிவித்தார். தனது கணவர் செந்தில்குமார் தன்னை தினந்தோறும் அடித்து கொடுமை படுத்துவதாக தெரிவித்தார்.
நாத்தனார் கொடுமை:
மேலும், தனது நாத்தனாரின் கணவர் ரவிக்குமார் , தனக்கு சொந்தமான நகைகளை அபகரித்து கொண்டதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கவிதா புகார் கூறினார்.
வன்கொடுமை வழக்கு:
அவரது புகாரின்படி அண்ணாசாலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதம் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கணவர் கைது:
கவிதாவின் கணவர் செந்தில்குமாரும், கவிதாவின் நாத்தனார் கணவர் ரவிக்குமாரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற காவலில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications