விரைவில் ஆர்.கே நகரில் அதிகாரப்பூர்வமாக கட்சிப் பெயரை அறிவிப்பேன் : தினகரன்
சென்னை : விரைவில் தான் தொடங்க இருக்கும் கட்சிப்பெயரை ஆர்.கே நகரில் வைத்து அறிவிப்பேன் என்று அத்தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே நகரில் தனது தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை கண்ணகி நகரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, தனது வெற்றியின் மூலம் மக்கள் அரசியலுக்கான மூன்றாவது அத்தியாத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். திமுகவை அண்ணா ராயபுரம் ராபின்சன் பூங்காவில் வைத்துத் தொடங்கினார்.
அதே போல, மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். விரைவில் , அதற்கான துரோகிகளை அழிப்பதற்கான நடவடிக்கை துவங்கும்.
புதிதாக ஆரம்பிக்கவுள்ள கட்சிக்காக மூன்று பெயர்களை தேர்தல் கமிஷனிடம் பரிசீலிக்கக் கொடுத்துள்ளோம். அதூ தொடர்பாக இன்று நடக்க வேண்டிய இருந்த கூட்டம், பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஆனால், வெகுவிரைவில் தேர்தல் கமிஷன் ஒப்புதலோடு புதிய கட்சி தொடங்குவேன். அந்தக் கட்சிப் பெயரை ஆர்.கே.நகர் தொகுதியில் வைத்து அறிவிப்பேன் என்று டி.டி.வி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications