புதிய கட்சிக்கு பிப்.21-ல் மாவட்ட செயலாளர்கள் நியமனம்... கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு!
புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு பிப்.21-ல் மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னை: புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு பிப்.21-ல் மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் அதே நாளில் மதுரையில் அரசியல் மாநாடு நடத்த உள்ளார்.
இந்த நிலையில் முதல்முறையாக கட்சிக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும் ஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் கமல் கூறியுள்ளார்.
பிப்.21-ல் கட்சி பெயர் அறிவிப்பு, மாநாடு, கோடி வெளியீடு, நிர்வாகிகள் நியமனம் என பல முக்கிய நிகழ்வுகள் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.