தேசிய மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையங்களில் புகார்.. சோபியா தரப்பு அதிரடி முடிவு
Recommended Video

தூத்துக்குடி: சோபியா விவகாரம் குறித்து, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயக்குமார் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசையை பார்த்து, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என விமானத்திற்குள் வைத்து கோஷமிட்டதாக தமிழிசை அளித்த புகாரின்பேரில், மாணவி சோபியாவை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.
290 ஐபிசி, மற்றும் மெட்ராஸ் சிட்டி போலீஸ் சட்டம் 75 ஆகியவற்றின்கீழ் சோபியாவிற்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டுமே பிணையில் விடக்கூடிய சட்டப்பிரிவுகளாகும்.

சோபியாவிற்கு ஜாமீன்
இன்று, தூத்துக்குடி நீதிமன்றத்தில், சோபியா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, சோபியாவிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். சோபியாவிற்கு புத்திமதி கூறுமாறு, அவரின் பெற்றோருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
இதன்பிறகு, சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயக்குமார் கூறுகையில், சோபியாவிற்கு நடந்த ஆபத்துகள் சம்மந்தமாக, தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களிடம் புகார் அளிக்க உள்ளோம்.

தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
இதேபோல, தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். மாநில மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

8 மணி நேரத்திற்கும் மேலாக அச்சுறுத்தல்
ஏனெனில், 8 மணிநேரத்திற்கும் மேலாக இளம் பெண் மற்றும் மாணவியான சோபியா, காவல்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். விமான நிலையத்தில் பல முனை நெருக்கடிகளை அவர் சந்தித்துள்ளார். சிகிச்சைக்காக சோபியாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க கோரிக்கைவிடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications