ஏற்காடு தேர்தலில் போட்டியிடுவது குறித்து மேலிடத்தில் கேட்டு சொல்றோம்.. ஞானதேசிகன்

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தல் தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து எங்கள் கருத்துக்களை கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்போம். மேலிடம் உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கும் என்றார் அவர்.
சல்மான் இலங்கை போகிறார்
மேலும் அவர் பேசுகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நாளை முதல் 2 நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு தமிழர்கள் பகுதியில் இந்தியா சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை நேரடியாக பார்வையிடுகிறார். பின்னர் சுற்றுப்பயணத்தின்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது மற்றும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக பேசுகிறார்.
காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் நாட்கள் அதிகமாக உள்ளது. தற்போது இலங்கையில் மாறுபட்ட சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இந்த தேர்தல் கூட இந்தியாவின் அழுத்தத்தினால்தான் நடைபெற்றதாக முதல்வர் பொறுப்பேற்க இருக்கும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.
தற்போதைய சூழ்நிலை மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு காமன்வெல்த் மாநாடு தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றார் ஞானதேசிகன்.
Yercaud Tourism - A Less Explored Hill Station












Click it and Unblock the Notifications