சிக்கலில் இரட்டை இலை சின்னம்.. ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவுக்கு காத்திருக்கு தலைவலி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் முடிவு மட்டுமின்றி, தேர்தலில் அதிமுக எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காகவும்தான்.
ஜெயலலிதா முதல்வர் மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் வரப்போகிறது.
ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

சின்னம்
அந்த வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கச் சொல்லி தேர்தல் அதிகாரிக்குத் தரப்படும் 'பார்ம் பி-யில்' ஜெயலலிதா கையெழுத்துக்கூட போடமுடியாத நிலையில் கைநாட்டுதான் வைத்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் மக்களிடம் இருந்த அனுதாபத்தை பெற்று, அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.

எதிர்ப்புகள்
ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில், ஆளும் கட்சியின் வெற்றி எளிதாக வாய்க்க போவதில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஜெயலலிதாவின் மர்ம மரணம், அதிமுக சசிகலா வசம் போனது, அதிமுக முக்கிய தலைவரான பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குள் போனது, தீபாவின் குற்றச்சாட்டுகள, தினகரனின் ஆதிக்கம் என ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக திரும்ப மக்களுக்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

ஓ.பி.எஸ் அணி மனு
ஆர்.கே.நகர் தொகுதியில், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிட்டால் நான்குமுனைப் போட்டி ஏற்படலாம். இங்கு போட்டியிட்டால்தான் இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு ஓ.பி.எஸ் அணி மனு செய்ய முடியும்.

சின்னம் முடக்கம்?
அதனால் இரட்டை இலை முடக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருக்குமா? என்ற கேள்வி தற்போது பெரிதாக பேசப்படுகிறது.
-
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார்












Click it and Unblock the Notifications