தேவைக்கேற்ப தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: தேவைக்கேற்ப தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விஜயகாந்துடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி கெஞ்சி, தாங்கியும் அவர் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் தனியாக போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார் விஜயகாந்த். இருப்பினும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி குறித்து பேச வரலாம் என அவரின் மனைவி பிரேமலதா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில், தேவைக்கேற்ப பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.
சட்டசபை தேர்தலை பாஜக தனியாக சந்திக்க தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 2014ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்கும் அளவுக்கு பாஜக பலம் வாய்ந்ததாக இருந்தது. தற்போதும் பலமான கட்சியாகவே உள்ளது. சட்டசபை தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எங்கள் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் கூட எங்கள் பணி அவர்கள் வெற்றி பெற உதவும் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் சிதைந்துவிட்டன. அவற்றை எப்படி ஒன்று சேர்ப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எல்லாம் சேர்ப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications