ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் கைகோர்க்கிறார்களா கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும்?
ஊழல் ஒழிப்பை மையப்படுத்தி கட்சித் தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலுடன், நடிகர் கமல்ஹாசன் நடத்தும் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை : ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டதாகச் சொன்ன நடிகர் கமல்ஹாசனை ஊழல் ஒழிப்பை மையமாக வைத்து தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் சமூக ஆர்வலருமான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் இன்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக சொன்னதால் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் கமல்ஹாசன். வெளியில் இருந்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம், அரசியலுக்கு வந்துவிட்டு பேச வேண்டும் என்று அமைச்சர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டதாக டுவிட்டரில் அறிவித்தார் கமல்ஹாசன்.
தொடர்ந்து டெங்கு ஒழிப்பு, நீட் தேர்வு தடை என மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார். அவரிடம் அரசியல் குறித்து பேசியதாகவும், விரைவில் கமல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாகவும் செய்திகள் பரவின.

2011ல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி
இந்நிலையில் ஜன் லோக்பால் மசோதாவைக் கோரி 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கத்தை அரசியலாக்க வேண்டும் என்ற சிந்தனையில் ஆம் ஆத்மி கட்சியை துவங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கமல்ஹாசனை சென்னையில் சந்தித்தார்.

மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுத்த கட்சி
ஆம் ஆத்மி கட்சி உருவாகியது முதல், ஊழலுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது. டெல்லியில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் விலை ஏற்றத்திற்கு காரணம் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கழகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியது. கற்பழிப்பிற்கு எதிரான கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரி, கற்பழிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது.

3 ஆண்டில் ஆட்சியை பிடித்தது
2013 டெல்லி சட்டசபை தேர்தலில் அறிமுகமான இந்தக் கட்சி டெல்லியில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2013 டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் படி ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களை வென்றது. 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலில் இந்தக் கட்சி நாட்டின் பல பகுதிகளில் போட்டியிட்டாலும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் நான்கு இடங்களில் வென்றது.

கைகோர்ப்பார்களா?
இதனிடையே ஊழல் ஒழிப்பு என்னும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து செயல்பட நடிகர் கமல்ஹாசனுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் இந்த அழைப்பை கமல்ஹாசன் ஏற்றாரா என்று தெரியவில்லை. ஏனெனில் இந்த சந்திப்பிற்கு பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் இருவரும் பரஸ்பரம் இந்த சந்திப்பு பெரும்பாக்கியம் என்று மட்டுமே கூறியுள்ளனர். இதனால் ஆம் ஆத்மியுடன் கமல்ஹாசன் கைகோர்ப்பாரா என்பது சந்தேகம் தான் என்பது மட்டும் தெரிகிறது.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications