மணிசங்கர் அய்யர் இனி டீ குடிப்பாரா?
சென்னை: நரேந்திர மோடியை டீ விற்பவர் என்று முதன்முதலாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் இனி டீ குடிப்பாரா என்று தெரியவில்லை.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வந்தன. அப்போது காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் மோடி டீ விற்றது பற்றி விமர்சனம் செய்தார்.
அதன் விளைவுகள் இப்படி இருக்கும் என்று அய்யர் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.
மோடி
நான் சிறுவயதில் வறுமையில் வாடினேன். ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் டீ விற்றேன் என்று பிரச்சார கூட்டத்தில் மோடி கூறினார். அப்போது அவர் டீ விற்றதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அய்யர்
மணி சங்கர் அய்யரோ மோடியால் பிரதமராக முடியாது. வேண்டும் என்றால் அவருக்கு கடை வைத்துக் கொடுக்கிறோம் காங்கிரஸாருக்கு டீ விற்கட்டும் என்றார்.
பாஜக
அய்யர் எந்நேரம் பார்த்து மோடியை சாய்வாலா என்றோரோ அதை பாஜக கெட்டியாக பிடித்துக் கொண்டது. பிரச்சார மேடைதோறும் சாய்வாலா சாய்வாலா என்று கூறியே வாக்குகள் கேட்டது.
சாய்வாலா
மோடியும் செல்லும் இடமெல்லாம் நான் டீ விற்றவன் என்று பெருமையாகக் கூறியதுடன் டீக்கடைக்காரர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
வதோதரா
மோடி தான் போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது டீக்கடைக்காரர் ஒருவரை அழைத்துச் சென்றார். அந்த டீக்கடைக்காரர் மோடியின் வேட்புமனுவை முன்மொழிந்தார்.
நமோ டீ
மோடியின் பெயரில் நமோ டீ என்று விற்றனர். அது பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனது. அய்யர் கூறிய சாய்வாலாவை வைத்தே பாஜக பாமர மக்களின் ஆதரவை பெற்றது.
வெற்றி
மோடி தான் போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரனாசி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
பிரதமர்
தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து மோடி பிரதமர் ஆவது உறுதியாகிவிட்டது.
டீ
எந்த மோடியால் பிரதமர் ஆக முடியாது டீ தான் விற்கப் போகிறார் என்று அய்யர் கூறினாரா தற்போது அதே மோடி தான் பிரதமர் ஆகப் போகிறார். அப்படி என்றால் அய்யர் இனி டீ குடிப்பதை நிறுத்துவாரா?