வாடிவாசல் திறக்காதவரை வீட்டு வாசலை திறக்கமாட்டோம்- அலங்காநல்லூர் பெண்கள் ஆவேசம்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை அலங்காநல்லூரில் இன்று 4வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரி வாடி வாசலை திறக்கும் வரை இடத்தை விட்டு நகரப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டு

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. வாடிவாசலை திறக்கும் வரை வீட்டு வாசலை திறக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப்போட்டிகளை காண தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வம் காட்டி வந்தனர்.

will not open house until vadivasal opens: woman in Alanganallur

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. இதனால் அலங்காநல்லூர் வாடிவாசல் மூடப்பட்டுள்ளது.

வாடிவாசலை திறக்கக்கோரியும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கானோர் கடந்த திங்கட் கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் இளைஞர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசலை திறக்கும் வரை வீட்டு வாசலை திறக்கப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+