தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறக்கப்படும்.. மதுரையில் குமாரசாமி பேட்டி
கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்வதால், தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
மதுரை: கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்வதால், தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. நேற்று நீரின் அளவு 37,000 கனஅடியானது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் வழிபாட்டிற்காக மதுரை வந்திருக்கும் கர்நாடக முதல்வர் காவிரி நீர் திறந்து விடப்படுவது குறித்து பேசியுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதில் பிரச்சனை இல்லை என்றுள்ளார்.
கடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது. இப்போது கர்நாடகா, தமிழகம் இடையே நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்னையும் இருக்காது.
கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும். தமிழகத்துக்கு நேற்று இரவு 20,000 கன அடிநீர் திறக்கப்பட்டது. அணை நிறைய நிறைய இன்னும் தண்ணீர் திறக்கப்படும் என்றுள்ளார்.