Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நத்தம் அல்லது திண்டுக்கலில் ஜல்லிக்கட்டு.. தமிழக அரசு திடீர் திட்டம்?

அலங்காநல்லுருக்குப் பதில் நத்தம் அல்லது திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை நடத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அருகில் வேறு ஏதாவது ஊரில் ஜல்லிக்கட்டை நடத்தி விட்டு கணக்கு காட்ட தமிழக அரசு முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்ததாக பதிவாக வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Will OPS conduct Jallikattu in some other town?

இதைச் செய்து விட்டு நாளை கூடும் சட்டசபைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அனேகமாக மதுரைக்கு அருகே நத்தம் அல்லது திண்டுக்கல்லில் முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு நடைபெறலாம் என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன. மேலும் முரட்டுக்காளைகள் கிடைக்காமல் போனால் வாடிவாசல் வழியாக சாதாரண காளைகளை அவிழ்த்து விடலாமா என்றும் ஆலோசனை நடக்கிறதாம்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது மதுரை பாண்டியன் ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கு வைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+