நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மும்பை வந்தார் ரஜினி
நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டார்.
Recommended Video

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னையிலிருந்து மும்பைக்கு வந்துள்ளார்.
துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அங்கு அவரது உயிர் பிரிந்தது.

ஆரம்ப காலத்தில் ரஜினி, கமல் ஆகியோருடன் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் இறப்பு ஈடு செய்ய முடியாதது என்று ரஜினியும், கமலும் தனித்தனியே இரங்கல் செய்தி வெளியிட்டும், பேட்டியையும் கொடுத்தனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக மும்பைக்கு இன்று இரவு விமானம் மூலம் துபாயிலிருந்து கொண்டு வரப்படுகிறது. அவரது உடல் கெட்டு விடாமல் இருப்பதற்காக எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு மும்பை புறப்பட்டு சென்றார். நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரஜினி, கமல் ஆகியோர் மும்பை வந்துள்ளனர்.
ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு நாளை இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. மும்பையில் உள்ள இல்லத்தில் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications