பொண்டாட்டி துன்புறுத்துறான்னு கல்யாணத்த தடை பண்ணுவீங்களா?: கேட்கிறார் கவுண்டர்
சென்னை: மாடுகளை துன்புறுத்துவதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபேஸ்புக்கில் நச்சென்று ஒரு மீம் வெளியாகியுள்ளது.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின்போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் அன்று பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

பணக்காரர்கள் குதிரை பந்தயம் நடத்துகையில் அதை எல்லாம் கேட்பார் இல்லையா, பாவப்பட்ட தமிழர்கள் தான் கிடைத்தார்களா என்று மக்கள் ஃபேஸ்புக்கில் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மணி என்பவர் ஃபேஸ்புக்கில் ஒரு நச்சென்ற மீமை வெளியிட்டுள்ளார்.
அதில் கவுண்டர், காளைய துன்றுபுறுத்துறாங்கனு ஜல்லிக்கட்டை தடை பண்றீங்க,
புருசன பொண்டாட்டி துன்புறுத்துறாங்கனு கல்யாணத்தை தடை பண்ணிருவீங்களா என்ன..!! என்று கேட்கிறார்.
யாராவது பதில் சொல்லுங்கப்பா, நல்ல கேள்வியாத் தான் கேட்டிருக்கிறார்...












Click it and Unblock the Notifications