டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்களின் பயோ-டேட்டாவை தாக்கல் செய்ய வேண்டும்- ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: டிஎன்பிஎஸ்சி-க்கு நியமிக்கப்பட்ட 11 புதிய உறுப்பினர்களின் பையோ -டேட்டாவை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி 31-ந் தேதி அதிமுகவைச் சேர்ந்த 11 பேர் புதிய உறுப்பினர்களாக நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். இந்த நியமனத்தில் வெளிப்படத் தன்மை இல்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனகூறி திமுக சார்பில் டிகேஎஸ்.இளங்கோவன், பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உறுப்பினர்கள் நியமனம் அனைத்தும் சட்ட விதிகளின்படி தான் நடைபெற்றுள்ளது. இதில் விதிமுறைகள் மீறப்படவில்லை. மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தமிழக அரசின் சார்பில் ஆஜாரன அட்வகேட் ஜெனரல், உறுப்பினர்கள் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் மட்டுமே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையெனில், உறுப்பினர்களின் பையோ-டேட்டாவை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், டிஎன்பிஎஸ்சி-க்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணியமூர்த்தி, எம்.ராஜாராம் ஆகிய 11 பேரின் பயோ-டேட்டாவையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications