Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சை, அரவக்குறிச்சி போல ஆர்.கே.நகரிலும் தேர்தல் ரத்து? டிடிவி தினகரன் தரப்பில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணப்பட்டுவாடா புகார்களால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற பரபரப்பு அரசியல் கட்சிகள் இடையே எழுந்துள்ளது.

மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஓட்டுகளை வாங்குவது அதிகம் என்ற எண்ணம் இந்தியா முழுக்க வந்துவிட்டது.

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலிலும் இதே நிலைதான் நீடிக்கும் என்ற கருத்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கே இருப்பதாக கூறப்படுகிறது.

புகார்கள்

புகார்கள்

அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆளும் கட்சி பணப்பட்டுவாடா செய்வதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார்களை அளித்து வருகிறார்கள். இதனால் ஆளும் தரப்பு மீது கடும் நெருக்கடிகளை காட்டி வருகிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஒத்திவைப்பு

தேர்தல் ஒத்திவைப்பு

குற்றச்சாட்டுகள் அதிகரித்தபடியே இருந்தால், ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்தி வைத்துவிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை டிடிவி தினகரன் தரப்பு விரும்பவில்லை.

முதல்வராக திட்டம்

முதல்வராக திட்டம்

டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணை வேகம் பெற்றுநாள்தோறும் விசாரணை என்ற அளவுக்கு சென்றுள்ளதால், தீர்ப்பும், விரைவில் வர அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தீர்ப்புக்கு முன், எப்படியாவது தான் எம்.எல்.ஏவாகி, முதல்வராகிவிட வேண்டும் என்று தினகரன் கருதுவதாக கூறப்படுகிறது.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம், சில உயர் அதிகாரிகளை காத்திருப்பில் வைத்தது, தினகரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் என அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஏற்கனவே வரலாறு

ஏற்கனவே வரலாறு

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகலாம் என்ற யூகங்கள் கிளம்பின. கடந்த சட்டசபை தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில், பணப் பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடாவுக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றது.

தம்பிதுரை கெஞ்சல்

தம்பிதுரை கெஞ்சல்

இந்நிலையில், நேற்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனுக்கு சென்று தேர்தல் கமிஷனர்களை சந்தித்து, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வரும் புகார்கள் ஆதாரமற்றவை. இதை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+