தமிழக சட்டசபையில் இன்று என்ன 'சம்பவம்' செய்வாரோ? திமுக கூட்டணியில் நீடிப்பாரா வேல்முருகன்?
சென்னை: தமிழக சட்டசபையில் தமிழர் நலன் சார்ந்தும் தமிழர் மண் சார்ந்தும் தமது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைப்பேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்து சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக வேல்முருகன் முழக்கம் எழுப்பியதால் முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்திக்குள்ளானார். இந்த நிலையில் இன்றும் சட்டசபையில் வேல்முருகன் எப்படி செயல்பட போகிறார்? திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்றுள்ளது. பண்ருட்டி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர் வேல்முருகன்.

ஆனால் கடந்த சில மாதங்களாக திமுக தலைமை மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார் வேல்முருகன். தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவும் வேல்முருகன் திட்டமிட்டிருந்தார். தமிழக அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை வேல்முருகன் முன்வைத்தார்.
இதன் பின்னர் திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் வேல்முருகன். இந்த சந்திப்பின் போது தமது மனக் குமுறல்களை வேல்முருகன் கொட்டியதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் வேல்முருகன் தலைமையிலான தவாகவில் நாம் தமிழர் கட்சியின் பல்வேறு முன்னணி நிர்வாகிகள் இணைந்தும் வருகின்றனர். இதனால் சட்டசபை தேர்தலில் ஒரு சீட்டுக்கும் அதிகமான இடங்களைப் பெற்றுத் தர வேண்டிய நெருக்கடியிலும் தவிப்பிலும் வேல்முருகன் இருந்து வருகிறார். திமுக கூட்டணியில் வேல்முருகனுக்கு ஒரு சீட்டுக்கும் அதிகமான இடம் கிடைப்பதற்கும் வாய்ப்பு குறைவுதான்.
இந்த நிலையில் திடீரென பாமக நிர்வாகிகள், வேல்முருகனை சந்தித்தனர். இதனால் பாமகவுடன் வேல்முருகன் கை கோர்ப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்தது.
இதனிடையே தமிழக சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. சட்டசபையில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாகவும் நின்று கோரிக்கைகளை எழுப்பினார் வேல்முருகன். இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பரிந்துரைத்தார். ஆனால் சபாநாயகரோ, வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை மட்டும் விடுத்திருந்தார்.
இதனிடையே, தமிழக சட்டசபையில் இன்றும் தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை எழுப்புவேன்; அப்போது திமுக தலைமை என்ன வேண்டுமானாலும் முடிவெடுக்கட்டும் என கூறியிருக்கிறார் வேல்முருகன். அதேநேரத்தில் இந்த நிமிடம்வரை திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறேன் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்றும் திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் வேல்முருகன் நடவடிக்கைகள் இருந்தால் சபையில் இருந்து அவர் வெளியேற்றப்படக் கூடும்; இதனைத் தொடர்ந்தே திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறும் நிலைமையும் உருவாகலாம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி!












Click it and Unblock the Notifications