கை கொடுத்த காற்று – 3000 மெகாவாட்டை தொட்ட காற்றாலை மின் உற்பத்தி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக காற்று நன்றாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி சுமார் 3 ஆயிரம் மெகா வாட்டை எட்டியுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். தமிழகத்திற்கு தேவையான 12995 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு கை கொடுக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் சுமார் 2 ஆயிரம் மெகா வாட்டுக்கு குறையாமல் மின்சாரம் கிடைத்து வருகிறது.
நேற்று மாலை வரை சுமார் 2638 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. இது அதிகாலை 2 மணிக்கு மின் உற்பத்தி 1629 மெகா வாட்டாக இருந்த நிலையில் காலை 7 மணிக்கு 2973 மெகா வாட்டாக உயர்ந்தது. கடந்த இருபது நாட்களில் காற்றாலை மூலம் அதிகபட்சமாக நேற்று மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகா வாட்டை எட்டியது.
இந்த நிலையில் ஒரு சில இடங்களில் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு மின்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் சில தொழில் நிறுவனங்கள் மூன்று ஷிப்டுகளில் உற்பத்தியை தொடர முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
குற்றாலத்தை பொறுத்தவரை வரை வானம் மாலை நேரங்களில் மேக மூட்டமாக இருந்தாலும் மழை வருவதற்கான வழியை காணவில்லை. இதனால் சீசன் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. சீசனை எதிர்பார்த்து குற்றாலத்தில் கடைகளை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications